Kavithai
1. Kavithai
நீ ஒற்றை கவிதை அல்ல
கவிதை நூலகம் நீ
நீ ஒற்றை பூ அல்ல
பூந்தோட்டம் நீ
நீ ஒற்றை நிலவு அல்ல
ஒராரயிரம் நிலவு நீ
எப்படியோ
எனக்கு நீ ஒருத்தி மட்டும் தான்
2. Kavithai
குடை இருந்தும்
நனைகிறேன்
காதல் மழையில் !!!!!
என் கன்னத்தின்
மேடையில்
அவள் இதழ்களின் நடனங்கள் !!!!
3. Kavithai
கடற்கரை மணலில் வரையப்பட்ட இதயமாய் என் காதல்....!
அலைகளின் வலிமையில்தான்
தங்கிக்கிடக்கிறது
அமைதிபெறுவதா இல்லை
அழிந்துவிடுவதா என்று....!
ஆம்....
உன் அன்பெனும் அலையில்தான்
தங்கிக் கிடக்கிறது
என் காதல்...
உயிர்பெறுவதும் உலர்ந்துபோவதும்....!!
4. Kavithai
பறிக்கப்பட்ட பூக்களை விட
ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!
5. Kavithai
விலகி போகிறாய் என்றுதான்
நெருங்கி வந்தேன்
வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால்
நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன்
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்...!!!
6. Kavithai
தூங்கிவிட்டதாய் நினைத்து
நெற்றியில் கொடுக்கும்
ஒற்றை முத்ததிற்காக
ரெட்டை கண் மூடி
முப்பொழுதும் விழித்திருந்தேன்
நாலு நாளாச்சு நீ கொடுத்து
ஐம்புலனும் கெஞ்சுதடி
ஆறறிவு உனக்கிருக்கா
ஏழு வண்ண வானவில்லாய்
எட்டுவைச்சு வந்துடுடடி
ஒன்பது கிரகம் தாண்டி பறந்திடலாம்
பத்திகிட்டு எரியுதடி
பைத்தியமே புடிக்கிதடி!!
7. Kavithai
ஒரு மனிதனாக
பிறந்ததிற்கு
பதிலாக
ரோஜாவாக
இருந்து இருக்கலாம். . !
ஒரு நாள் ஆவது
உன் கூந்தலில்
இருந்து இருப்பேன்
8. Kavithai
முதல் காதல்
ஒரு கோடி வானவில்
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்...
ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து .
ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்
ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்
... மறந்து விடு என்னை....
அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...
(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல்வன்
9. Kavithai
நான் இறந்தால் நீ அழுவாயா
என்று எனக்கு தெரியாது ஆனால்..
நீ அழும்போதெல்லாம்நான் இறக்கின்றேன்..
10. Kavithai
உன் நெற்றியில்
வேர்க்கின்ற போது தான்
நான் நினைத்தேன்
அடடா....
நிலவிலும் நீர்
இருக்கிறதென்று....!
11. Kavithai
இதயத்தில் உனைச் சுமந்து உன் நினைவுகளுக்கு
தாயானேன்...!
என்றும் நீ என் பிள்ளைதான்..!
உன் தோள் சாயும்போது நானும் உன் பிள்ளைதான்..
12. Kavithai
என் இதயத்தை மட்டுமல்ல
என் கனவுகளையும் ,
கற்பனைகளையும் கூட
நிரப்பிக் கொண்டிருக்கிறது
உன் நினைவு
13. Kavithai
என்னை கட்டி,
இழுத்து,
எங்கோ இழுத்து,
செல்கிறாய்,
மெளனமாக..
உன்னை தொடர்கிறேன்,
காதலோடு..
14. Kavithai
ஒரு நிமிடம் கூட
இடைவெளி விடாமல்,,,
என் நினைவில் வந்தால்;;;
எப்படி
நான் மறப்பது???
15. Kavithai
காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும்
எனது இதய துடிப்போடு கலந்துவிட்ட
உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது
No comments:
Post a Comment