Appa kavithai in tamil - Thanthai kavithaigal
ஒன்றுக்கும் உதவாதவன்,
உருப்பிடாதவன், தண்டச்சோறு,
தடிமாடு என்று நம் முன்னால் அதிகம்
திட்டினாலும்...
உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு,
அயர்ந்து தூங்கும்
பொழுது நமக்கே தெரியாமல் நம்
கால்களை நீவிவிட்டு நமக்காக சில
துளி கண்ணீர் விடுவார்...
நமக்கு பின்னால் தந்தை...!
appa kavithai - thanthai kavithaigal - dad kavithai in tamil
By Fh
Amma kavithaigal - mother kavithaigal - mom kavithaigal - thai kavithaigal
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம்
மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே..
Amma kavithaigal - mother kavithaigal - mom kavithaigal - thai kavithaigal
அம்மா!
எனக்கேதும்
ஆச்சுதின்னா உனக்கு வேறு
பிள்ளையிருக்கு. ....
உனக்கேதும் ஆச்சுதின்னா
எனக்கு வேறு தாயுண்டா!
Amma kavithaigal - mother kavithaigal - mom kavithaigal - thai kavithaigal
By Fh
Thai Kavithai
அம்மா!! எதையோ நினைத்து
நீ பலமுறை கண் கலங்கிய
போதும் நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை.
ஆனால்.. ?
தூசியால் நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை காரணம்
கேட்டு துடித்து போனாயம்மா...
நீ பலமுறை கண் கலங்கிய
போதும் நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை.
ஆனால்.. ?
தூசியால் நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை காரணம்
கேட்டு துடித்து போனாயம்மா...
வானளவு உயர்ந்த உள்ளம்
கடலளவு ஆழ்ந்த கருணை
வெறுப்பை காட்டாது
அன்பை மட்டுமே
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி அம்மா ...!!!
கடலளவு ஆழ்ந்த கருணை
வெறுப்பை காட்டாது
அன்பை மட்டுமே
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி அம்மா ...!!!
Thai kavithai MOM
By Fh
Amma(அம்மா) Kavithai
1. Amma(அம்மா) Kavithai
உனக்காய் துடித்த ஓர் இதயம்.!
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்.!
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்.!
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்.!
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்.!
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்.. !
அம்மா
2. Amma(அம்மா) Kavithai
ஒரு எதிர் பார்ப்பும் இல்லாத உறவு இவ்வுலகில் ஒன்று இருக்குமானால்
அது தாய் உறவு மட்டுமே...
3. Amma(அம்மா) Kavithai
அம்மா அப்பாவின் அன்பிற்கு நிகராக நம்மீது
ஒரு அன்பு கிடைக்குமெனில்
அது தாத்தா பாட்டியின்
அன்பே
4. Amma(அம்மா) Kavithai
குழந்தையின் அழுகுரல்
வாத்தியாரின் அதட்டல்
இளஞனின் விசில்
தாயின் தாலாட்டு
சிற்பியின் உளியில்
சில்வண்டின் சலசலப்பு
உறக்கத்தில் குறட்டை
உண்ணும் போது விக்கல்
எத்தனை ஓசை இருந்தென்ன லாபம்
கருவறை உறக்கத்தை கலைக்காமல் எனக்காய்
கவி பாடிய என் தாயின் இதய துடிப்பு அல்லவா ஓசை!
5. Amma(அம்மா) Kavithai
வீட்டில் உள்ள பொருளை
"அம்மாவால்"
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்
"அது"
தொலைந்து விட்டதாக அர்த்தம்
6. Amma(அம்மா) Kavithai
அம்மா
கடைசி தோசை சாப்பிடும் போது,
சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து
சட்னியை காலி செய்ய சொல்லி,
இன்னொரு தோசை வைக்கிறதுதான் அம்மாவின்
பாசம்.
7. Amma(அம்மா) Kavithai
அப்பாவின் கோர்ட்டில்
குற்றவாளியாக
நாம் நிறுத்தப்படும் போதெல்லாம்
எப்பொழுதும் பிள்ளைகளின் சார்பாக
வாதிடும் வக்கீலாக அம்மா
முடிவில்
அவ்வழக்கே தள்ளுபடி செய்யப்படுகிறது .
8. Amma(அம்மா) Kavithai
தந்தையின் தோள் மீது அமர்ந்து காணும் உலகமும்,
தாயின் இடுப்பில் அமர்ந்து காணும் உலகமும் வெவ்வேறானவை...
9. Amma(அம்மா) Kavithai
ஆயிரம் நிலவுகள்
வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றை சூரியனாய்
என்று பிரசாகம் வீசம்
அம்மா உன் அன்பு
10. Amma(அம்மா) Kavithai
ஒவ்வொரு வலிகளிலும்
அன்னையின் மடியை
தேடுகிறது இதயம் !
அன்னையை தவிர இந்த
உலகத்தில் உண்மையான
பாசம் வைக்க வேறு
ஆள் இல்லை !
Amma Kavithai dedicated to MOM
By Fh
Subscribe to:
Comments (Atom)







