இப்படி எத்தனையோ
இருள் போர்வையை போர்த்திக் உறங்கிக் கொண்டிருந்த வானம்,சூரியன் எழுப்ப சோம்பல் முறித்த வாறே புன்னகையுடன் எழத் தொடங்கியது…..!பூவுக்கு கை கால் முளைத்தது போல அழகாய் வயல் வெளி ஒரம் உலா வந்துக்கொண்டிருந்தான் ராகுலன்.நல்ல அழகு ,நல்ல அறிவு, வயதுக்கு மீறிய வளர்ச்சி உடன் ஒய்யாரமாய் ஒடி திரிந்தான்.படிப்பில் படுசுட்டியான ராகுலன் எட்டாம் வகுப்பில் அந்த பகுதியின் முதல் மாணவன் பரிசை வென்று மேல்படிப்பிற்கு பக்கத்து ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.!விடுமுறை நாட்களில் அந்த வயதுக்கே உரிய துடுக்குடனும் ,ஆர்வத்துடனும் நண்பர்களின் பேச்சு அவரவர் மீசை முளைப்பதில் மேலோங்கி இருந்தது.
என்னடா..உங்க ஆத்தா மூட்ட மூட்டயா உனக்கு மஞ்சள் பூசி விட்டுசா?மீச முடியவே காணோம். நண்பர்களின் கேலி அவனை யோசிக்க வைத்தது,யாருக்கும் தெரியாமல் தன் மூக்கின் கீழ்பகுதியை தொட்டுப்பார்த்து ஏமார்ந்து போனான்.!இப்படி ஒன்றிரண்டு ஆண்டுகள் கழிய…..பெண்களை வியந்தும்,ஆண்களை வெறித்தும் பார்க்க ஆரம்பித்தான் .பெணுக்குத் தான் எத்தனை எத்தனை அணிகலன்,வண்ணப்பூச்சு,,அழகின் சொர்க்கமே பெண் தான் என்று எல்லோரிடமும் சொல்லித்திரிந்தான்,பெண் யென்றால் என்ன?அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது?அவளுக்கு மட்டும் ஏண் அவ்வளவு……என தெரிந்துக்கொள்ளத்துடிக்கும் விடலை பருவம் அவனுக்கு ,சரியாகிவிடும் என மனதை தேற்றிக்க்கொண்டனர் வீட்டார்.
ஒருநாள்,,,
தீடிரென அவனுக்குள் ஒரு ரசாயண மாற்றம்…!ஏதோ ஒருவித மின்னல் அவனுக்குள் பாய்ந்தது….!அவனுள் நடக்கும் வேதியியல்மாற்றம் அவனைச் செதுக்கிக்கொண்டிருந்தது…..முதல்
முறை பார்ப்பதுபோல் ,இதுவரை பார்க்காததுபோல் கண்ணாடியில் விழுந்த தன் பிம்பத்தை ரசித்து ரசித்துப்பார்த்தான்,அவனின் ஐம்புலனுக்குள்ளும் அதிசயம் நிகழத் தொடங்கியது.!ஏதோ சக்தி கிடைத்த முனிவன் போல் உள்ளுக்குள் ஒருகுரல் அவனை சூடேற்றியது.,பட்டென்று கதவை தாழிட்டான்,!எல்லோரும் என்ன ஆச்சோ?எதாச்சோ?யென பதறிக்கொண்டு ஒடி வந்தனர்.ஒரு அரைமணி நேரம் கழித்து அனைவரின் கண்களிலும் அப்படி ஒரு ஆச்சரியம்.!அனைவரும் குழுவாக பேசும் ஆரவாரம் அந்த இடத்தை மேலும் ஒலிக்கு உடன்படுத்தியது…என்ன?என்ன?யென அலரிஅடித்துக்கொண்டு வந்த ராகுலன் பெற்றோர்,அவனைப் பார்த்த அந்த நொடி கற்சிற்பமாகி நின்றனர்.போயி…….!உங்க அண்ணன பாரு!என ஏதோ ஒரு கிழவி சொல்ல எங்க அண்ணனுக்கு என்ன?என பதில் கொடுத்த செல்வியின் கண்கள்,அவனை கண்ட நொடி…..தன் இடத்தில் இருந்து நீரை சொரிந்தது,..!
கையில் வளையல்…,தலையில் பூ!முகத்தில் திலகம்!உதட்டில் சாயம்!நகத்தில் பளபளப்பு !காலில் சலங்கை!மாரப்பு மறைப்பில் புடவை…!என நளினமாய்..,ஏதோ மிகப்பெரிய விடயத்தை சாதித்த சாதனையாளன் அடைந்த திருப்தியுடன் நடந்து வந்தான்.!ஆம்!அவன் ,,,,,,,,,,,,,,,,,,அவளானான்!
என்னடா!ராமையா?ஆம்பள பிள்ளய பெத்திருக்கனு பாத்தா…..அலிப்பயல பெத்து வச்சுருக்க…!இதுக்குத்தான் இவ்வளவு அலும்பல் காட்டுனயா?இந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்!என கேலி வார்த்தையுடனும்,கேவலப்பார்வை உடனும் ,அந்த இடத்தை விட்டு அந்த கும்பல் அகன்றது.!இடி இடித்தது போன்ற ஒரு சப்தம்.வந்த இடம் ராகுலன் கன்னம்!அவன ,விடுங்க!அடிக்காதீங்க,,,!என்ன ராசா!இதெல்லாம்,ஆம்புள பிள்ள போகக்கூடாதுப்பா!போயீ!அவுரு!தாய் கெஞ்சலானாள்!மாட்டேன் என்பதை செய்கையில் காட்டியவாரே,தன் அழகை கண்ணாடியில் பார்த்து பார்த்து பூரித்துப்போனான்!அவனின் செய்கைகள் உச்சக்கட்டம் அடைந்தன!வீட்டிலும்,வெளியிலும் இருந்து வரும் மறைமுக வார்த்தைகள் அவனை தினமும் தின்றுக்கொண்டிருந்தன,ஒருநாள்!வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.!அழுகையும்,ஏமாற்றமும் அவனை சூழ,,,தூங்கியெழும் போது அம்மாவை தேடி அழும் குழந்தைப்போல் வாழ்க்கையைத் தேடி அலைய ஆரம்பித்தான்!பேருந்தில் உட்காரும் போதே,,அருகில் இருந்தவர் அடுத்த இருக்கைக்கு நகர ஆரம்பித்தார்.!சமுதாயத்தின் கேவலப் பார்வை அவனுக்குள் கேள்விக்குறியாய் இறங்கியது.!
தீடிரென ஒரு குடிமகன் கையைப் பிடித்து இழுத்தான்!அதிலிருந்து விடுபட போரட்டமே நடத்தினான்,ஆனாலும் பலன் இல்லை.என்னடீ!பத்தினி வேசம் போடுற?பாம்பே பக்கம் போயிட்டு வந்துட்டையா?வரையா?ஒரு நைட்டுக்கு 300ரூபாய் தரேன்!யென அவன் அசிங்கமாய் பேச,வெறிக்கொண்ட வேங்கையைப் போல அவனை தாக்கி தப்பி ஓடினான்,!காலை வரை ஓயாது நடந்த அவனின் கால்கள் கொஞ்சம் ஒய்வு தரச்சொல்லி மூளைக்கு மனுக்கொடுத்தது!ஒரு வீட்டின் வாயிலில் அமர்ந்தான்.ஏய்!என்ன!இங்க எல்லாம் உக்கார கூடாது!போ!போ!,,துரத்தினாள் அங்கு வந்த பெண்மணி!அப்போது “அவ்வை அனாதை இல்லம்”பற்றி ஒரு நல்லவர் கூற,அதன் முகப்பு வாசலில் தன் விடியலுக்கான முகாந்திரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உள் நுழைந்தான்!
உங்க பேரு என்ன?கேள்விக்கு யென்ன பதில் தரலாம் என யோசித்து தனக்குள் சொல்லிக்கொண்டான்.!ராதா!ராதா!என்ன பதில் சொல்லல!மறுமுனையில் இருந்து மீண்டும் கேள்வி வர,ராதா!என்றான் அழுத்தமாய்!ஒ!நல்ல பேரு!இருங்க,அம்மா வருவாங்க! எனச்சொல்லி அந்த பெண் நகர்ந்தாள்!
ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க அழகான,அந்த அம்பாளின் சொரூபமாய் ஒரு அம்மையார் வந்தார்.எழுந்தான்.யாரும்மா நீ?எந்த ஊரு?அதைக்கேட்ட நொடி மகிழ்ந்து போனான்!ராதா!நிலக்கோட்டை.ஒ!வயசு.-18.!ஓடி வந்துட்டையா?இல்ல விரட்டிவிட்டாங்களா?விரட்டிடாங்க!!சாப்பிட்டு 2நாள் ஆச்சு!தழும்பிய குரலில் தளர்ந்து பேசினான்,கோகிலா!இவள கூட்டிட்டுபோ!முதல சாப்பிடு!நல்லா தூங்கு!அப்பறம் பேசலாம்!என விடைப்பெற்றுக் கொண்டு போனார் அந்த அம்மையார்.!பல நாள் உணவை பார்க்காத பிச்சைக்காரனுக்கு ராஜ உணவு கிடைத்தால் எப்படி உணர்வானோ?அப்படி உணர்ந்தான் அவன்.
மறுநாள்!
ராதா!உன்பேரு நல்லா இருக்கே!என்ன படுச்சிருக்க!
+2.இப்பத்தான் முடிச்சுருக்கேன்,
என்ன மார்க் வரும்?
தெரியல
சும்மா சொல்லு
ஒரு 1100க்கு மேல வரும்.
அவ்ளோ நல்லா படிப்பையா?ம்
இவ்வளோ நல்லா பிள்ளயா இருக்க
அப்பறம் ஏன் அழுது கிட்டே இருக்க ?
என்ன நனைச்சு ?
என் நிலமைய நினச்சு !
இப்போ உனக்கு என்ன குறை ?
நல்லா படிக்குற ?
அழகா இருக்க !
அப்பறம் ?
இதுமட்டும் போதுமா மேடம் ?
என்ன அம்மான்னு நீ கூப்பிடலாம் !............
,என்று சொல்லும் போதே,,சாரதா அம்மையாரின் கண்களில் கருணை மின்னியது!
கடவுள் உன்னை கஷ்டப்பட வைக்க கூடாதுன்னு தான் இங்க அனுப்பி இருக்கார்,இத உன் சொந்த வீடா நனச்சுக்க,இனிமேல் இது தான் உன் சொந்தம்.இங்க உனக்கு நிறையா வேல இருக்கு!இனிமேல் இங்க இருக்குற குழந்தைங்களுக்கு நீ தான் ஆசிரியர்.சரியா?யென சாராதாஅம்மா சொல்ல கைக்கூப்பி நன்றி சொன்னான்.!சரி வா!வெளியில போயிட்டு வரலாம் யென அந்த அம்மா அழைக்க,,,,,,!இல்ல நான் வரல.வந்தா எல்லோரும் என்ன கேலி செய்வாங்க.இந்த மாதிரி பிறக்க நானா காரணம்.நான் வரல.அழுதுக்கொண்டே போனான்.நாட்கள் வாரங்களை கடத்தின.
இரவு-11மணி.ராகுலன் என்கிற ராதா.அந்த அம்மையாரின் கதவை தட்டினான்.யாரு! உள்ளிருந்து குரல்.நான் தான் ராதா!,வா!என்னம்மா?இந்த நேரத்தில.எதாவது வேனுமா?சாரதா அம்மா கேட்க,நீங்க தப்பா எடுத்துக்காட்டி கொஞ்ச நேரம் உங்க மடியில படுத்துக்கவா?கெஞ்சினான்.வா..!வாம்மா!என்று தன் கரம் கொடுத்தவள் மடி கொடுத்தாள்.ராதாவின் கண்ணீர் அவரின் மடியை நோக்கி பயணித்தது.முடியை கோதி,உச்சி முகர்ந்தார்.என்னப்பா?ரிசல்ட,நினச்சு பயப்படறயா?ம்………….!நீ கவலப்படாத!போய் படு!விடியும் பொழுது உனக்கான அடையாளத்தை கட்டாயம் தரும்!என்று சொல்லி அனுப்பிவைத்தார்….!தன் அம்மாவின் நினைவு அலைகளில் தத்தளித்தவாறே உறங்கிவிட்டான் ராதா!.
சூரியன் தன் கதிர்களைக்கொண்டு சுடத்தொடங்கியது,ஓ!கடவுளே!நல்ல மார்க் வரனும்.வந்தா ஆத்தா குலசாமிக்கு படையல் போடுரேன்னு சொல்லுச்சு,ஆமா!சாமி,என்ன சாமி,என்ன வீட்டவிட்டு விரட்டிவிட்ட சாமி.!விரத்திஉடன் கூட்டுப்பிராத்தனையில் உட்காந்
தான்.ராதா….!ராதா!அவனை உசுப்பியது ஒரு குரல்.உன்ன அம்மா கூப்பிடுறாங்க!கண்களை திறந்தான்.!காலம் அவனுக்கு பரிசு தரப்போகிறதோ,இல்லை வாழ்வைப் ப்போல எமாற்றம் தரப்போகிறதோ!குழம்பிக்கொண்டே அறை கதவை தட்டினான்.திறந்த பாடில்லை.தள்ளினான்….!பூ மழைக்கொட்டியது!பிரமித்துப்போனான்!அறைக்குள் அனைவரும் கைத்தட்டி அவனை வரவேற்றனர்.பெருமை கலந்த பார்வைஉடன் அம்மையாரை பார்த்தான்.இந்தா!ஒரு காகிதத்தை நீட்டினார்.அதைப் பார்த்தவுடன் ஐய்யா………….!எனக்கத்தினான்.அனைவரையும் கட்டிப்பிடித்து குதூகலித்தான்,குழந்தைகள் ஓடி வந்தனர்.அனைவருக்கும் இனிப்பை வழங்கியவாறே ,,மகிழ்வின் விளிம்பின் சிரித்துக்கொண்டெ சொன்னார்!எல்லோரும் கைத்தட்டுங்கள்,ன்நம்ப,ராதா அக்கா,,,,,,,,,,,!1179மார்க் எடுத்து இருக்காங்க.!ஏய்!ஏய்ய்!குழந்தைகள் ஆரவாரமிட்டனர்.பல வருடங்களுக்கு அந்த அலுவலகத்தில் சிரிப்பும் ,கும்மாளமுமாய் நகர்ந்தது அந்த நாள்.அவன் நினைப்பு மட்டும் அவன் அம்மாவிடம் இதை எப்படிச்சொல்வது என்றிறுந்தது..ஒரு பெண்ணிடம் அலைப்பேசி வாங்கி தன் ஆனந்தத்தை பகிர்ந்துக்கொள்ளத் துடித்த அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இவன் குரலைக்கேட்டு,பேயரையும் கேட்ட தந்தை இணைப்பை துண்டித்தார்,எந்த மூஞ்சிய வைச்சு இங்க பேசுற,உனக்கும்,இந்த குடும்பத்துக்கும் ஒன்னும் இல்ல.ஊருல தல காட்ட முடியல போன,வை.!அதட்டி,அலட்சியப்படுத்தினான் அண்ணன்..வேறயென்ன செய்ய முடியும் அழுவதை தவிர ராதாவால்……!
ஓடி வந்தான் அந்த அம்மையாரிடம் ,நடந்ததை சொன்னான்.
நீ!சாதிக்க பிறந்த பிறவி!யாருக்காகவும்.எதுக்காகவும் நீ அழக்கூடாது!நான் என்ன பண்ணினேன் அம்மா!ஆணும் இல்லாம,பெண்ணும் இல்லாம,போக நானா காரணம்?பேசாம,இந்த பொழப்புக்கு செத்திடலாம்…..அவன் விரத்தியில் வார்த்தைகளை கொட்டி விட்டான்.
சாகறது என்ன அவ்வளவு பெரிய விசயமா?வாழ்றதுதான் பெரிசு,வாழ்ந்துக்காட்டுறதுதான் பெரிசு….!இந்த அவமானம்,அசிங்கமெல்லாம் உன்ன மேன்மைப்படுத்த போடப்படும் உரம்,!
நான் முடிவு பன்னிட்டேன்,!நாளைக்கு பாம்பே போறோம்.எதுக்காகம்மா?சொல்றேன்.தெரிஞ்சுக்க தான,போற.
ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.!போ!ஒருவர் வந்துஅழைத்துப்போனார்,அரைமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு!அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் முடிந்தது!கண் விழித்தாள்!
ஆம்!முழுமையாய் அவளாகி போயிருந்தாள்.!இப்போ சந்தோசமா?இனிமே நீ தைரியமாய் உலா வரலாம்.நீ முழுமையாய் பெண் ஆகிவிட்டாய்.!சொல்லிக்கொண்டிருந்த அந்த அம்மையாரின் விழிகள் கீழே பார்த்தது,சாஷ்டாங்கமாய் காலடியில் விழுந்துக்கிடந்தாள் ராதா!எங்க குடும்பம்,,ஊரே என்னை விரட்டிச்சு!நீங்க……..!வார்த்தை வெளியில்வராமலும்,உள்ளே இருக்க முடியாமலும் நடுவில் நின்றது.
கொஞ்ச நேரத்தில் ஒரு நான்கைந்து பேர் அந்த அறைக்குள் நுழைந்தனர்,கையில் பூங்கொத்துடன்!
யாரு!யாரு!நீங்க!கேள்விகள் தொடுத்தாள்.ஏய்!ஏய்!ரிலாக்ஸ்!ரெஸ்ட் எடு!சாரதா அம்மா இல்லையா?கேள்வியை முடிப்பதற்குள் அந்த அம்மையார் அறைக்குள் நுழைந்தார்.ஒட்டுமொத்தமாய் அவரைச்சூழ
என்னடா!கண்ணுங்களா?நல்லா இருக்கீங்களா?
விமலா வேல எப்படி போகுது?சந்தியா ஸ்கூல் நல்ல ரிசல்ட் தருது போல.தேவிமா,இந்த வருஷம் டாப் வேல்டுல உன் பெயரும் வரனும்.ஒகே!என விசாரித்துக்கொண்டிருந்த சாரதாவை ஒருவித மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதா!ஆச்சரியப் பார்வை பார்த்துக்கொண்டிருந்த ராதாவை நோக்கியும்,நோக்காமலும் பேசிக்கொண்டிருந்த தருணம் அவளுக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கியது.அப்போது
ஏய்!ராதாகுட்டி!என்ன பாக்குற?இவங்க எல்லாம் உன் அக்காக்கள்.
அக்காக்களா?புரியல!
இவங்களும் உன்ன போல தான்.
என்ன?இவங்கயெல்லாம் திருநங்கைகளா?
சத்தியம் பண்ணி சொன்னாலும் நம்பமுடியாது,பெண்களே மயங்கும் பேரழிகள்!!என்னம்மா!நம்பமுடியல!சும்மா தானே சொல்றீங்க!
இல்லப்பா!இது நிஜம்.இவர்களும் உன்னைப் போல அடைக்கலம் தேடி நம் இல்லத்திற்கு வந்தவர்கள் தான்.இப்போது பல ஆயிரம் பேர்களுக்கு இவர்கள்தான் அடைக்கலம்.!வழித்தவறி போகாமல்,பசிக்காக சதையை விற்றுப் பிழைக்காமல்!சாதிச்ச இளம் பெண்கள்,!நீயும் இவர்களை போல சாதிச்சு பெரிய ஆளா வரனும்!அதுக்குதான் இவர்களை இங்கு வரச்சொன்னேன்.
இவங்க ஒவ்வொருத்தர்க்குள்ளையும் ஒவ்வொரு கதை இருக்கு!பலமுறை பலரால் விரட்டி அடிக்கப்பட்டு விழுந்தவர்கள்.ஆனால் அப்படியே இருக்காமல் எழுந்து,இப்போது யாருமே தள்ளி விட முடியாத உயரத்தில் உச்சியில் உட்காந்திருக்கும் இந்த ஒவ்வொருவரையும் உலகம் உற்றுநோக்கிகொண்டிருக்கிறது!இவர்களின் கையெழுத்திற்காக ,புகைப்படத்திற்காக ,இவர்களுடன் ஒரு வார்த்தைப் பேச மணிக்கணக்காய் காத்திருக்கிறது.
தேவி!கூட்டிட்டுப்போ!
எங்கம்மா?
துப்பாக்கி சுடுற,பயிற்சிக்கொடுக்க!!
துப்பாக்கி சுடுற!பயிற்சியா?ம்!நீ தான் நல்லா குறிப்பாப்பையே?உங்களுக்கு எப்படித் தெரியும்?நீ!கவட்டை வச்சு குறிப்பார்த்து மாங்காவை விழ வைத்து எல்லோருக்கும் தந்தாயே!அத நான் பாத்துட்டு இருந்தேன்.!அப்படியா?நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
இன்னும் 4மாதத்தில் “காமன்வெல்த்” போட்டியில நீ கலந்துக்க போற!
நானா?காமன் வெல்த் போட்டியிலயா? அது பெரிய விசயம்!என்னால…..?
அவள் முடிக்கும் முன்னே,
தேவி தொடர்ந்தாள்!
முடியும்!நிச்சயம் முடியும்!பயிற்சியும் ,முயற்சியும்,தன்னம்பிக்கையும்,ஜெயிச்சே ஆகனும்ன்ற வெறியும் இருந்தா,நிச்சயம் முடியும்!
உன்னால முடியும்!
அவளின் தன்னம்பிக்கை வார்த்தை ராதாவுக்குள் ஒரு புத்துண்ர்ச்சியை தந்தது,!
திருமணமாகி புகுந்தவீடு செல்லும் புதுப்பெண் போல சாரதாஅம்மாவிடம் விடைப்பெற்றுக்கொண்டு தேவியுடன் போனாள் ராதா!
வாரங்கள் மாதங்களை கடத்தின,!
அதுவரை எதுக்காக காத்திருந்தனரோ?அந்த போட்டிக்கான நாள் வந்தது….!விண்ணப்பத்தில் பெண் பிரிவில் விண்ணப்பித்தாள்!
சோதனை நடந்தது!நீ போகலாம்!நீ போட்டிக்கு வர தகுதியில்லை!
நீ!போகலாம்! என சில கோட்டுப்போட்ட நல்லவர்கள் அவளை
விரட்டிவிட்டனர்!
என்கிட்ட என்னகுறை? காரணம் வேணும்!வேணும்!கத்தினாள்!
யாருமே செவி சாய்க்க தயாராக இல்லை!
போட்டி நடக்க சில மணி நேரம் தான் இருந்தது.!தனக்குத் தானே தன்னம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக்கொண்டாள்!
நேராக! அரங்கத்தில் பலரும் உள்ள போது அந்த போட்டியை நிர்வகிக்கும் குழுவிடம் திடமாக பேசினாள்.
என் பெயர்-ராதா!
இந்தியா!
நான் தகுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற பின்னரும் ;தகுதியில்லை யென தூரத்தி அடிக்கப்பட்டேன்!எனக்கு நீதி வேண்டும்!
நீ!-திருநங்கை! இதில் கலந்துக்கொள்ள உனக்கு தகுதி இல்லை!பதில் வந்தது!
ஓ!இதுதான் என் குறையோ?
இந்த மாதிரி பிறக்க நான் தான் காரணமா?
ஆதியும்,அந்தமும் இல்லா அர்த்தநாதீஸ்வரனின் சொரூபம் நான்!
என்னாலயும் சாதிக்க முடியும்.
வாய்ப்புக் கொடுங்கள்!கெஞ்சினாள்!
விடுப்பா!இந்த மாதிரி ஆட்களால பெரிசா என்ன சாதிச்சற முடியும்?அதுவும் இந்தியாவுல இருந்து………….?
என தங்களுக்குள் பேசிக்கொண்டு,
ஏளனச்சிரிப்புடன்,கேலியுடனும்,ஒரு அருவருப்பான பார்வையுடனும் அனுமதித்தனர்,அந்த மேலைநாட்டு மேதாவிகள்!
அவளுக்கான அந்த தருணம்!அந்த நொடி1பிரம்ப்பில் அவள்!
மொட்டு மலர்கிற அந்த சப்தம் கூட கேட்கும் அளவு நிசப்தம் அங்கு!
ஆயத்தமானாள்!
இறைவனை பிராத்திக்க வில்லை !சாரதா அம்மையாரை மனதில் நிறுத்தினாள்!எதா இருந்தாலும்,பதறாம,பொறுமையா !கவனமா!செய்ப்பா!அம்மா,அடிக்கடி சொல்லும் வார்த்தைகளும்,மனதில் வந்து போயின!
தேவி அக்கா நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணமும்,தன்னை அசிங்கப்படுத்திய ,அவமானப் படுத்திய உலகை நினைத்தும்,
ஒரு விதையிலிருந்து வெடித்து எழும் முதல் இலையாய்
பட்டென்று சுட்டாள்!
உலகமே ஆச்சிரியப்பட்டது!
ரெக்கார்டு பிரேக்! ரெக்கார்டு பிரேக்! என,
எங்கு பார்த்தாலும் வியப்பின் முழக்கம்!
அவளால் அதை நம்பவும் முடியவில்லை,நம்பாமலும் இருக்க முடியவில்லை!அழுகையும்,சிரிப்புமாய்,அவையோரை நோக்கி ஒரு நிறைந்த பார்வை பார்த்தாள்!
கையை வான் நோக்கி வெற்றிக்குறிக்காட்டினாள்!
வானம் தன் பூவாகிய தூறலை அவள் மீது தூவியது!
இந்தியாவிற்கு தங்கம்!இந்தியாவிற்கு தங்கம்! எங்கும் ஒலித்தது!
விமானம் விட்டு இறங்கிய உடன்,இதுதான் ராஜ மரியாதையோ?திளைத்துப்போனாள்!அவள் கண்கள் சாரதாவையும்,தேவியையும் தேடி,தேடி ஓய்ந்து போயின!அவர்களைக் கண்ட நொடி, மழைத்துளி கண்ட விவசாயி போல் அவர்களை ஆரத்தழுவினாள்!
அவளைச் சுற்றி சுவர்ப்போல் புகைப்பட கலைஞர்கள்.பத்திரிக்கையாளர்கள்……………!எந்த உலகம் அவளை வெறுத்ததோ,இப்போது அதே உலகம் அவளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது!
ஏய்!கலக்கீட்ட,!தேவி கைகுடுக்க!எல்லாம் தங்களிடம் பருகிய ஞானப் பால் தான் குருவே!ராதா சிரித்துக்கொண்டு பதில் கொடுத்தவாறே,அனைவருடன் புறப்பட்டாள்!அவளை நோக்கி வந்த புகைப்பட ஒளி அந்த மின்னலையே தோற்கடித்தது!
முதல்வரும்,பிரதமரும் பாராட்டையையும்,பணமுடிப்பையும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஒரு பிரமாண்ட மேடையில் அவளை பேச அழைத்தனர்!
அவள் பேசிய முதல் வார்த்தை நான் திரு நங்கை .இதை சொல்வதில் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.பெருமை தான்,என ஆரம்பித்து சுமார் 1மணி நேரம் பேசினாள்!ஒவ்வொரு வரிக்கும் கைத்தட்டல்கள்.அதை எல்லா தொலைக்காட்சியும் அதை நேரடி ஒளிப்பரப்பு செய்தன,அதை பார்த்த அந்த கிராமமே உறைந்து போனது!அவள் குடும்பம் வெட்கி தலை குனிந்தது,அவள் அம்மா மட்டும்,
எம்புள்ள எங்க போனாலும்,எப்படி மாறினாலும் ஜெயிப்பான்,,யெனச் சொல்லி பட்டென எழுந்து போனாள்.பெருமையுடன்,,,,,,,,,,!
நீங்க சொல்ற மாதிரி நான் ஒன்னும் பெருசா சாதிச்சடல.!எனக்கு கிடைத்த மாதிரி வழிக்காட்டுதல் கிடைத்தால் நீங்களும் சாதிக்கலாம்.என சாரதாவையையும்,தேவியையும் காட்டி மேடைக்கு வர சொன்னாள்!மைக் சாரதாவிடம் கொடுக்கப்பட்டது
!அவளும் சொன்ன முதல் வார்த்தை நான்
நானும் " திரு நங்கை "
என்று தான் !
.அனைவரின் கண்களிலும் ஆச்சரியம்.தேவிக்கு அதுநாள் வரை தெரியாத ரகசியம்!வியந்தே போனாள் அவள்.
ராதவின் பேச்சைவிட சாரதாவின் பேச்சு இன்னும் அதிகமாய் மக்களை கவர்ந்தது.இந்த வெற்றி ஒட்டுமொத்த திருநங்கைகளின் வெற்றி!எங்களாலையும் சாதிக்க முடியும்!இந்தியாவிற்கே புகழை தேடி தர முடியும்,யென சொல்லி ஆனந்த கண்ணீரோடு,ராதாவை முத்தமிட்டு இறங்கினார்.பின் பேசிய ராதா அழுத்தமாய் ஒன்றை பதிவு செய்தாள்.
பெண் மனதை பெண் அறிவாலோ இல்லையோ ?
“திருநங்கை மனதை திருநங்கை நிச்சியம் உணர்வார்””!
புல் கூட நல்ல வழிகாட்டுதல் கிடைத்தால் பூமியைத்தாங்கும்.!
என சொல்லி முடித்து இறங்கினாள்!அவள் வாழ்வு எழுந்தது!
நாட்டிற்கும் இப்படி நல்ல வழிகாட்டுதல் கிடைத்தால் நாடே முன்னேறி விடும் அல்லவா?
இப்படி எத்தனையோ(Ippadi ethanayo) - Tamil Kathaigal
By Fh
முகம்
இதோ, இப்போது தொட்டு விடலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால் நெருங்க நெருங்க தூரம் போய்க் கொண்டே இருந்தது வானம். அது யாரின் கை என்று தெரியவில்லை. அவன் மேல் நோக்கிதான் பார்க்கிறான் . அவன் கையை பிடித்து அவனை மேலே மேலே, மேலே தூக்கிக் கொண்டு போவது மட்டும் யாரெனத் தெரியவேயில்லை.....உடலில் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களும், சில்லிட்டு போகச் செய்யும் ஆனந்த பூங்காற்றும், அவனை எடை இழக்க செய்தது .....தன்னை ஒரு சருகாக உணர்ந்தான். அங்கே ஓர் இலையுதிர்ந்த மரம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறது.. அந்த மரமே, வானத்தின் தொடக்கமாக இருக்கும் என்ற அவனின் கற்பனை அவனை, ஒரு வித மாயத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்றது.....ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் காட்சியை அவனால் நன்றாக உணர முடிகிறது..மூச்சு வேக வேகமாக உள்ளிழுக்கப்பட்டு, தட்டுத் தடுமாறி, உடல் நடுங்கி, வியர்த்து, தலை சுற்றுவது போல் உணர்ந்து.........
பிடித்து தூக்கி சென்ற கை, சட்டென தன் பிடியை தளர்த்த, இலையுதிர்ந்த மரம் நோக்கி பறந்து கொண்டிருந்தவன் மைக்ரோ வினாடியில் படுக்கையில் கிடந்தான்.....வேக வேகமாய் மூச்சு வாங்கியது.... சட்டென திறந்த விழிகள் திரு திருவென வெற்றிடங்களை வரி வரியாய் ஆராய்ந்தது.....
எது நிஜம்? ...... தூங்கியதா... பறந்ததா !.... பறக்கும் போது தூங்கியது தெரிந்ததே.......தூங்கிய போதும் பறந்தது தெரிந்ததா?....... யோசிக்க யோசிக்க சிறுநீர் கழிக்கத் தோன்றியது... மெல்ல எழுந்தான்.. உடம்பெல்லாம் ஏதோ வலி. புதிய புதிய சிந்தனைகள், அவனுக்குள் ஒரு காட்டாறை புரட்டிக் கொண்டிருந்தது..... மெல்ல எழுந்தவன் கழிவறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்... கண்ணில் ஏதேச்சையாக, அவன் அறையில் வைக்கப் பட்டிருந்த ஆளுயர கண்ணாடி தென்பட்டது. பார், உற்றுப் பார் என உள்ளுணர்வு சொல்வதாக ஒரு உணர்வு ஏற்பட, உற்றுப் பார்த்தான்... அவனின் முகத்தை உற்று உற்று பார்த்தான்.. பார்த்துக் கொண்டேயிருந்தான்.....
மனிதனின் மிகப் பெரிய ஆபத்தான கண்டு பிடிப்பான, அந்த நிலைக் கண்ணாடியில் அவனின் பிம்பம் அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தது..... அது வெறும் பார்வை அல்ல.. அது தேடல்... எங்கே அந்த சிறகு... அந்த இலையுதிர்ந்த மரம், கடைசியாக கை நழுவும் நேரத்தில் சொன்ன நினைவுகளை கண்ணாடிக்குள் தேடியதாக, அவனின் முக பாவனை இருந்தது..... அமைதியாக பார்த்துக் கொண்டேயிருந்தான்.......
பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவனின் தம்பி ராமை, என்னடா, போட்டோவை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நெற்றி சுருக்கி யோசிக்க வைத்தது.....
ராம், இங்க வா.. என்றான் அவன்.....
ராம் வந்தான்.....
' என்ன என்பது போல பார்த்தான்'
அவன் போட்டோவில் இருந்து பார்வையை திருப்பாமல் போட்டோவில் இருப்பது யார் என்று கேட்டான்.....
'சரியாப் போச்சு' என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு...... போடாங்.......... கொய்யால ...... அவனவனுக்கு, டெஸ்ட் சைக்கிள் டெஸ்ட், மிட் டெர்ம்னு உயிர் போற வேல எவ்ளோ இருக்கு என்று தொடர்ந்த ராம், அவன் போட்டோவப் பார்த்துட்டு அவனே யார்னு கேக்கறான் என்று முணங்கியபடியே பள்ளி செல்ல வெளியேறினான்.....
அடுத்து அம்மா வந்தாள் ....பையனின் எப்போதும் போலானதொரு விளையாட்டு என்றே முதல் பார்வையை வீசினாள் ....
மெதுவாக, ஆனால் அழுத்தமாக கேட்டான்..... அம்மா அந்த போட்டோல இருக்கறது யாரு?
என்னாச்சு தேவன்... ஏன் காலையிலேயே கடுப்படிக்கற......?
அது யாருன்னு சொல்லும்மா.. எனக்கு தெரிஞ்சாகனும்.....தேவனின் வார்த்தைகள் பற்களுக்குள் சிக்கி தடுமாறி குழப்பத்திற்கான ஆரம்பமாய் நெளிந்தது...
அட.... லூசுப் பயலே..... அது நீ தாண்டா .. என்றபடியே சமையலறைக்குள் செல்ல முற்பட்டவளை மீண்டும் அழைத்தான்....
அம்மா, என்னாச்சும்மா உனக்கு? அது நானா.... நல்லா பார்த்து சொல்லும்மா.. அது நானா??????
தேவனின் முகம் யோசித்தபடியே தடுமாறியது......
இவன் விளையாடரானா இல்லை நிஜமாகவே ஏதாவது பிரச்சனையா.... என்ன இப்படி குழப்பறான்......
சமையலறைக்குள் செல்வதை விட்டு விட்டு தேவனின் அருகே வந்தவள்..... ' என்ன ஆச்சுடா .. உடம்பு ஏதும் சரியில்லையா'.. என்றாள் . உள்ளுக்குள் ஒரு வித பயம் பந்து உருட்டத் தொடங்கியிருந்தது.....
ஐயோ..... அம்மா... எனக்கு ஒண்ணும் இல்ல..... இந்த போட்டோ புதுசா இருக்கே.... அது தான் யாருன்னு கேட்டேன் என்றான் இயல்பாக.....
இல்லை..... கண்டிப்பாக தேவன் விளையாடவில்லை...... அவனின் போட்டோவைப் பார்த்து யார் என்று கேட்பது விளையாட்டு இல்லை என்பதை உள்ளம் உணர.....பாதங்களில் நடுக்கம் வரத் துவங்கியது அம்மாவுக்கு....தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தேவன் விளையாடாத..... காலேஜ்க்கு நேரமாச்சு... கிளம்பு என்று சொல்லி விட்டு வேக வேகமாய் சமையலறைக்குள் சென்று, சட்டென திரும்பி ஒளிந்து நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று கவனிக்கத் துவங்கினாள் ....
தேவன், தன் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தான்.. இடப் பக்கமிருந்த நிலைக்கண்ணாடியிலும் தன்னைப் பார்த்தான்.....மாறி மாறிப் பார்த்தான் பின் கத்தினான்.... அம்மா இங்க வா.... அம்மா......
மீண்டும் அவன் கத்துவதற்குள், இது ஏதோ விபரீதம் போலதான் எனபதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டே அவனருகே வேக வேகமாய் வந்தாள் ....
என்னடா.. ஏன் இப்படிக் கத்தற .. என்றாள் இயல்பாக இருப்பது போல....அவளின் உள்ளம் தாறுமாறாக தடுமாறிக் கொண்டிருக்க, கண்களில் அனிச்சையாக அவனின் போட்டோவும், கண்ணாடியும் விழுந்து கொண்டிருந்தது.....
அம்மா.... புரிஞ்சுக்கோ....ஆமா நீ ஏன் இப்படி நடுங்கற... உனக்கு என்னமோ ஆயிடுச்சு.. அது என் போட்டோன்னா, கண்ணாடியில தெரியிறது யாரோட முகம்.. பாரு என்றான்......கண்ணாடியை காட்டி....
மெல்ல கண்ணாடிக்குள் பார்த்தாள் ...
' என்னடா உளர்ற... கண்ணாடியிலையும் நீதாண்டா தெரியற...' விட்டால் அழுது விடுவாள் போல....
ம்ம்..... இது தான் சரி...... கண்ணாடிலதான் நான் தெரியறேன்... அது தான் என் முகம்....இந்த போட்டோல இருக்கறது என் முகம் இல்ல என்றான் அழுத்தமாக....
தேவன், அடி வாங்க போற... இந்த போட்டோவ உனக்கு நினைவில்லையா.... அதுல இருக்கறது நீயில்ல இல்ல ...... என்ன கதை விட்டுட்டு இருக்கறயா ...ம்..... கண்கள் கலங்கியபடியே அம்மா மிரட்ட.... மாறி மாறி பார்த்தவன், தலையைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான்....தேவன்....
போட்டோல இருக்கற தன் முகத்தை யாருன்னு கேக்கரான்னா, கண்ணாடியில தெரியிற அவனுடைய முகம் வேற ஒருத்தரோட முகமாத்தான் இருக்க முடியும்.... அதாவது, தன் முகத்தையே மறந்து வேறொரு முகத்தை தன் முகமா அவனோட மனசும் மூளையும் நினைக்குது....அந்த முகம் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியுது.... இப்போதைக்கு அவன் நினைக்கற, பாக்கற முகத்தையே நாமளும் பார்க்கற மாதிரி அவன்கிட்ட காட்டிக்கணும்.. இது சயின்ஸ்ல.....
டாக்டர், அவர் முகம் போன போக்கில் பாவனைகளோடு, தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க...
அம்மா... மனக்கண்ணில் , காலையில் , தேவன், தன்னை,இதுதான் தான் என்று கண்ணாடியில் காட்டிய அந்த பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்...அதுவும் அவன் தானே....
இன்னும் இன்னும் ஆழமாக ஆழமாக... உற்று உற்றுப் பார்த்தாள் ...தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள் ....
நாட்கள் நகரத் தொடங்கியது..
ஒரு நள்ளிரவில் கண்ட கனவில், இலையுதிர்ந்த வான மரத்திலிருந்து ஒரு சருகு மெல்ல மெல்ல காற்றின் கைகளில் தவழ்ந்து தவழ்ந்து அவள் வயிற்றில் விழுவதாக காட்சி முடிய, வெடுக்கென மூச்சு வாங்கி எழுந்து அமர்ந்தாள் ....அவளின் கண்கள் தானாக கண்ணீரை கொட்டத் தொடங்கியது....ஆழ் மனதிலிருந்து ஒரு அழுகுரல்.... அறையெங்கும் தவழத் தொடங்கியதாக தோன்றிய ஒரு எண்ணத்தில்.......
தேவனுக்கு முன்னால், இப்போது குழந்தை வேண்டாம் என்று கலைத்த அந்த இரண்டு மாத கருவின் உருவம் சருகாய் மிதந்தது.
முகம் (Mugham) - Tamil kathaigal
By Fh
மாய குதிரை
நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது. அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது.... மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை..... அது கற்பனை...
சரி, இன்னொரு வகையில் விளக்க முயற்சிக்கிறேன்.....
ஒரே ஒரு முறை நேரில் பார்த்த மரத்தை கற்பனையில் கொண்டு வந்து, இது வரை பார்க்காத பறவையை அந்த மரத்தில் அமர வைப்பதில் விளங்க முயற்சிக்கும் விஷயம், மரம் கற்பனை என்பது. ஏனெனில், பார்த்தோ, கேட்டோ மனதிற்குள் சென்ற ஒன்று தான் கற்பனைக்குள் வரும் என்பது விஞ்ஞானம். இதுவரை பார்க்காத பறவையை, அந்த கற்பனை மரத்தில் அமர வைத்து, அது பறவைதான் என்று சொல்வது மனதின் பயணம் அறியும் மெய்ஞானம்.
ஆக, கற்பனைக்கும், நிஜத்துக்கும் இடையே ஒரு இடைவெளி, எறும்பாய் ஊரிக் கொண்டிருப்பதை, தன்னை விடுவித்துக் கொண்ட இலையொன்றின் காட்சி காணும், எழுத்தாளனும், உழவனும் ஒரு சேர பேசுவதாக அமைகிறது, விளக்கமும், விளங்குதலும், சுவரும் ஓவியமுமாக ..... சில்லிடும் பனியில், தெரிந்தும், தெரியாமலும் பயணிக்கும் முகப்பு வெளிச்சமாக.......
அவனுக்கு வேலை கிடைக்கவில்லை..... எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தான் .... எல்லா பதிலுக்கும் ஒரு கேள்வி வைத்திருந்தார்கள்.கேளுங்கள் தரப்படும்..... நம்பிக்கையோடுதான் வேலை கேட்டான்.. அவர்களும் கேட்டார்கள், அதே நம்பிக்கையோடு.. என்னவெல்லாமோ செய்து பார்த்தான். உடல் மொழி, தெரிந்த மொழி என்று, முகம் மாற்றி, புன்னகை மாற்றி, மௌனமாய் பார்த்து, கவனமாய் பார்த்து.. இன்னும் என்னவெல்லாமோ செய்து பார்த்தான்.. இனி அழுகைதான் மிச்சம்.. அதையும் செய்து விடலாமா என்று கூட தோன்றியது .....ஒரே நேரத்தில் நான்கு பேர் கேள்வி கேட்கலாம். ஒரே நேரத்தில் வெவ்வேறு பதில்களை நான்கு பேருக்கும் எப்படி சொல்வது... என்ன கார்பரெட்டொ , உலகமயமாக்கலோ....? அவர்களாகவே ஒரு இலக்கணம் வைத்துக் கொள்கிறார்கள். பணம் செய்யும் பித்தில் , பாம்பு புத்தே கெத்தாய் கத்துகிறது.. இப்படி விளங்காத எதுகை மோனை சொல்பவரை உற்று நோக்குங்கள்....வெளிநாட்டு நிறுவனத்தில், பர்கர் உண்டபடியே இரவு வேலை செய்பவராக இருப்பார்....
கேள்விக்கு பதில் தெரியாத, சொல்ல முடியாத நேரத்தில் இப்படி சம்மதமே இல்லாமல் சிந்தனை சுழலுவது கூட தேடல் தான்....கண்கள் கலங்கியபடியே வெளியே வந்தான்.. வெளியே வந்த கட்சி அப்படியே புகைப்படமாகி நிற்க........
அதே போல் ஒரு நேர்முகத் தேர்வில் இன்னொருவன் அமர்ந்திருக்கிறான்....
எதிரே இருப்பவரின் பாவனைகளில், உடல் மொழிகளில் கேள்வியை கணிக்க முடிந்தாலும் ஏனோ நினைத்ததை பதிலாய் வெளிப்படுத்த முடியவில்லை.. எல்லாம் புதிதாகவே தெரிகிறது... ஏனோ புதிராகவே விளங்குகிறது.....கடைசியில், என பெரிய கடைசி, கடைசி என்ற ஒன்று உண்டா.. நாம் நினைத்துக் கொள்கிறோம் கடைசி என்று.. சரி கடைசி என்ற நினைப்பில், அவனுக்கு வேலை இல்லை என்றானது .. வெளியே வந்தான்....
முதலில் வேலையில்லை என்று வெளியே வந்து, புகைப் படமாய் நின்றவன், உயிர்தெழுந்து, மனது கனத்துக் கிடக்க நடக்கிறான்.... இரண்டாவது வந்தவனும் கனத்த மனதுடன் நடக்கிறான்....
இருவருமே, ஏதேதோ சிந்தனையில் உலகம் மறந்து, ஒருவரையொருவர் எதிரெதிரே கடக்கிறார்கள்.. இருவரின் மனதுக்குள்ளும் மரணம் என்ற ஒற்றைச் சொல் விஸ்வரூபம் எடுக்கிறது... பேசாமல் செத்து விட்டால் என்ன?
இந்த மரணம் அழ வைக்கும் .. பயம் கொடுக்கும். இறந்த பின் அமைதி கொடுக்கும். பிரச்சனையில் சிக்கிய எத்தனையோ பேர், தற்கொலையால் தீர்வு கண்டிருக்கிறார்கள். என்ன, உறவும் ஊரும் கொஞ்ச நாட்களுக்கு தட தடக்கும்..பட படக்கும் .... பின் தொலைக் காட்சி பெட்டிக்குள் ஓடி போய் ஒளிந்து கொள்ளும்....நாம் தப்பித்துக் கொள்ளலாம். மரணம் கூட சுயநலம் தான்.. முதலில் வந்தவனுடைய கற்பனை சிறகு தற்கொலையின் வீரியத்தோடு சிறகடித்தது....
இந்த மரணம், அழ வைத்தாலும் ஏதோ சொல்கிறது.. உயிரின் தேடலே மரணம். உயிர், பிரிந்த பின் எங்கு செல்லும், வானம் நோக்கியா... பிரபஞ்சம் தாண்டியா...? பால்வீதியில், பெட்டிக் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருக்குமா.....! என்ன நடந்தாலும், இந்த வேதனையை போக்கி விடும் நண்பன் அல்லவா.. இந்த தற்கொலை. இரண்டாவது வந்தவனுடைய மனம், பயணித்து ஒரு எல்லை வரை மரணத்தை கணித்து வந்தது....
இருவரும் எதிரெதிர் கடையில், நைலான் கயிறு வாங்கினார்கள்.....
மரணத்தை பார்த்த பிறகு, என்ன புரியும் என்பதை இருவருமே , ஒவ்வொரு மாதிரி புரிந்து வைத்திருந்தார்கள்.. எடுத்த முடிவு, எக்காரணத்தைக் கொண்டும் மாறி விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார்கள். கயிறு உறுதியானது தானா என்பதை இருவருமே, இழுத்துப் பார்த்து உறுதி செய்தார்கள்....சுற்றும் முற்றும் பார்த்தவர்கள், தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு எதிரெதிர் திசையில் நடக்க ஆரம்பித்தார்கள். இதுதான் தீர்வு என்று முடிவெடுத்த பின், சரி தவறு யோசிக்கத் தேவையில்லை என்பதை நன்கு புரிந்திருந்தார்கள்....
அவரவர், வீட்டுக்குள் ஒரு வித நடுக்கத்தோடும், படபடப்போடும், பரிதவிப்போடும், கலங்கிய கண்களோடும் அமர்ந்திருந்தார்கள். வர வேண்டிய மரணம், வராமல் போவதேயில்லை, வேண்டாம் என்பவர்க்கும்......துணிந்தவனுக்கு தூக்கு மேடை தூக்கு மேடையேதான் ....
முதலில் வந்தவன், ஸ்டூலைப் போட்டு அதன் மீது ஏறி நின்று, மின் விசிறியில் சுருக்கு கயிறை மாட்டினான்..... கழுத்தில் கச்சிதமாக பொருத்தி முடிச்சை இறுக்கினான்.....இரண்டாவதாக வந்தவனும், கயிறாய் கழுத்தோடு கட்டி, இதோ கால், நின்று கொண்டிருக்கும் ஸ்டூலை தட்டி விட தயாராகி இருந்தான்....
இருவரின் கால்களுமே நடுங்குகிறது..... இருவருமே, அறையின் கதவின் தாள்பாளை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள்....இன்னும் சில மணித்துளிகளில் கற்பனை சிறகு, மனப் பறவையுடன் கலந்து சுதந்திரமாய் பறக்க போகிறது.....
கனத்த மௌனம் .... கலைத்தது, ஏதோ ஒரு ஸ்டூல் வேகமாக கீழே விழுந்த சத்தம்.....
முதலில் வந்தவன், வேக வேகமாய், கழுத்தின் கயிறை இளக்கி , விலக்கி , கீழே இறங்கி ஜன்னலைத் திறந்தான்....
இரண்டாவது வந்தவனும், வேக வேகமாக கீழே இறந்கி , சத்தம் வந்த திசையில் இருந்த ஜன்னலைத் திறந்தான்.....
இரண்டு ஜன்னல்களுக்கிடையேவும் தெரிந்த அறையில் ஒரு ஜோடிக் கால்கள் தொங்கியபடியே, ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருந்தது....
கண்கள் விரிய இருவரும், எதிரெதிர், அவரவர் ஜன்னல் வழியாக, இடையில் இருந்த வீட்டில், திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே தொங்கி கொண்டிருந்த மரணத்தை பார்த்தார்கள்....
மரணம் என்பது அப்படி, இப்படி என்பது கற்பனை. மரணம் வந்தால் இறந்து விடுவோம் அதற்கு பின் என்ன என்பதான தொடர்தல் மனதின் பயணம்....இரண்டையும் சிறை கம்பிகளாக்கி, நடுவில் நிஜமாய் மரணித்து கிடப்பது, கற்பனையும், மனதின் பயணமும் ஒரு சேர சேரும் நொடிகளின் புள்ளி என்பதாகவே, இப்போதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.....
maaya kuthirai (மாய குதிரை) - tamil kathaigal
By Fh
kadhal kathaigal
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
அன்புள்ள மனைவியே
இன்னும் உன் நினைவால் வாடும்
உன் கணவன் எழுதும் மடல் இது...!
உன்னோடு வாழ்ந்த
அந்த கொஞ்ச நாட்களை
நானும் தினமும்
மீட்டிப்பார்க்கிறேன் ....
மீட்டிப்பார்க்கும் போது
வரும் கண்ணீரை துடைக்க
ஆளின்றி நானும் தவிக்கின்றேன்
காதலித்த
நாம் ஒன்றாய் சேரும் போது
நம்மை வாழ்த்த
உன்னோட குடும்பமும்
என்னோட குடும்பமும்
வராத போது
நீ கூறிய அந்த வார்த்தைகள்
'நாம ஒண்டா நூறு வருசம் வாழனுமுங்க '
தினம் நெஞ்சில் முள்ளாய் குத்துதடி ...
என் மடியில் படுத்து கொண்டு
உன் உயிர் உன் தொண்டைக்குழியால்
பிரிகையில்
நீ என் கைகளை இறுக்கி பிடித்து
உன் கண்கள் கலங்கியது
தூக்கத்தில் கனவாய் தோன்றி
தினம் என்னை கொல்லுதடி
என் துன்பத்தை சொல்ல
இங்கு நான் நாதி அற்று கிடக்கையில்
உன் அப்பன் வந்து கேட்கிறான்
'என் மக கொண்டு வந்த அந்த 4 பவுன் சங்கிலி எங்க'
இதற்கு நான் என்ன பதில் சொல்ல
என் மனைவியே .....?
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
Kadhal kathaigal
By Fh
Tamil Kathal Kathaigal
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
அன்பானவனே உனக்காக ஒரு குட்டிகதை...!
ஒரு ஊரில் இரு காதலர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இரண்டு மூன்று வருடங்கள் சந்தோஷமாக தான் வாழ்ந்தார்கள்... ஆனால் ஒரு நாள் தன் சுதந்திரத்தை பறிப்பதாய் கூறி கணவன் தன் மனைவியுடன் சண்டை பிடித்து அவளை வார்த்தையால் காயப்படுத்தி விட்டு வேறொரு ஊரில் தனியே வாழத்தொடங்கினான்...
ஒரு நாளும் பிரிவு என்ற சொல்லை தாங்காத மனைவி தவிப்புற்றாள்...ஒருவழியாக கணவன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அவள்... எப்படியும் தன்னை தன் கணவன் பார்க்க விரும்பமாட்டான் என எண்ணிக்கொண்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தாள்." உங்களை கட்டாயம் ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும்... உங்கள் பிரிவை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.. தயவு செய்து நான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்து ஒரு தடவை தன்னை பார்த்து விட்டு செல்லுமாறு" கூறியிருந்தாள்.
எனினும் அந்த கடிதத்தினை பொருட்படுத்தாத அவன் தன் வேலையை பார்க்க தொடங்கினான்... தன்னை இதுவரைக்கும் பார்க்க வராத கணவன் வேறு திருமனம் செய்திருப்பான் என தவறாக எண்ணினாள்...! எனினும் 5,6 நாட்கள் களித்து அவனுக்கு தன் காதல் மனைவியின் நினைவுகள் கண்ணை கூசவே உடனே தன் மனைவியை பார்க்க ஊருக்கு கிளம்பினான்....
ஏனோ துயரம்! அவனின் வீட்டு வாசலில் ஊரே கூடி நின்றது...! ஏதும் புரியாத அவன் விறு விறுவென தன் வீட்டுக்குள் நுழைந்தான்... அவலம்! அவனின் மனைவி மாலைகளுடன் மலர்வளையத்தின் நடுவே...! என்ன செய்வதென்று அறியாத அவன் திகைத்து போய் மனம் செத்து நின்றான்...! காதல் நினைவுகளுடன் அவளின் இறுதி சடங்குகளும் முடிந்து போனது....! அன்று இரவு....... தன் மனைவி இறுதியாக வாழ்ந்த அறைக்குள் சென்று அழுதான்...!அங்கு ஒரு கடதாசி உறையில் என் ஆசை கணவனுக்கு என்று எழுதிய கடிதம் ஒன்று இருந்ததை கண்டான்...!
" உங்களுக்கு இது வரைக்கும் ஒன்றையும்மறைத்தது இல்லை... ஏனோ என்னை கொஞ்ச நாளகவே உங்களுக்கு பிடிக்கவில்லை... பிடிக்காத ஒன்றுடன் வாழ முடியாது என்று தானே! அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்...! என்னால் உங்களை 3 ஏ 3 வருடங்கள் மட்டுமே சந்தோஷ படுத்த முடிந்தது என நினைகிறேன்... என்னை மன்னித்து விடுங்கள்...! காதலில் அவசரபட்டு விட்டீகள்..! இனியாவது உஙகளின் மனசுக்குபிடிச்சவளோடு வாழுஙகள்...! இறுதியாக ஒரே ஒரு ஆசை மட்டுமே...! நான் இறந்த பின்னர் என்னை அடக்கம் செய்யும்போது நீங்கள் என்னை காதலிக்கும் போது கொடுத்த பரிசுகள், மடல்கள் அனைத்தையும் சேர்த்து புதைத்து விடுங்கள்...! என்னோடு வாழ்ந்த வாழ்க்கையை பற்றி உங்களின் எதிர்கால வாழ்க்கை துணையிடம் கூறிவிடாதீர்கள்...பாவம் அவளாவது நிம்மதியாக உங்களுடன் வாழட்டும்...! என எழுதியிருந்ததை கண்டு "அய்யோ......" என குளறி அழுதான்.... அழுதும் என்ன பயன்....?????
இனியாவது யாரும் உங்களின் அன்பானவர்களை காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி பார்க்க விரும்பாதீர்கள்... காதலிக்கும் இதயம் மிகவும் மென்மையானது...! அது அன்பானவர்களைப் பற்றி பல்லாயிரகனக்கான கனவுகளுடன் இருக்கும் போது அதை நீங்கள் கசக்கி எறியும் போது எத்தனயோ தவறான முடிவுகளை எண்ண வைக்கும்...! தேவையில்லாத மெளனமும் கோவமும் இதயத்தை வேரோடு கிள்ளி எறியும் என்பதை யாரும்மறந்து விடாதீர்கள்!!!
அன்பானவனே இது உனக்காகவும்தான்.
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..
Tamil Kathal Kathaigal
By Fh
Subscribe to:
Comments (Atom)




